- கறிவேப்பிலை - 1 கப்
- மிளகாய் வற்றல் - 2
- மிளகு - 10
- உளுந்து - 2 ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- (உப்பு) தேவையான அளவு.
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுந்து சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கறிவேப்பிலையை மிதமான தீயில் வறுக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். சூடான சாதத்தில், இந்தப் பொடியுடன் நெய் அல்லது எண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Post a Comment